கம்பம், ஏப். 18: தேனி குள்ளபுரம் வேளாண் கல்லூரியில் பயிலும் 4ம் ஆண்டு மாணவிகள் கிராம தங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கம்பம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் உள்ள விவசாயிகளுக்கு மியாவாக்கி காடுகளை உருவாக்கும் முறை மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல்விளக்களித்தனர். இதில் மாணவிகள் பிரியங்கா சாகு, சவுந்தர்யா, சுருதி ஹரிணி , வைஷாலி, சுவாதி பா, நந்தினி, சுவாதி, துனிசியா பிரியா மற்றும் உதவி பேராசிரியர் கனிமொழி ஆகியோர் செயல்விளக்கம் கொடுத்தனர்.
The post விவசாயிகளுக்கு செயல்விளக்கம் appeared first on Dinakaran.